tamilnadu

img

ஒப்பந்த முறையை ரத்து செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம்

சென்னை, மே 16 - காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த முறையை  கைவிடுதல் உள்ளிட்ட கோரிக் கைகளை அரசு நிறைவேற்றா விடில் வேலை நிறுத்தத்தை நோக்கி செல்வோம் என்று  தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த  வேண்டும், தனியார்மயம், ஒப்பந்த முறை களை கைவிட வேண்டும், காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ கத்தில் 8 மண்டலங்களில் சிறப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்களன்று (மே 15) சிந்தாதிரிப்பேட்டையில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு)  சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு  பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து வோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் அதை அமல்படுத்தாமல் உள்ளது. தற்போது, ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு 7 ஆண்டு களாக உயர்த்தாமல் உள்ள அகவிலைப் படியை  உயர்த்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்க அரசு முயற்சிக்கிறது. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதும் ஒருவகை மறைமுக தனியார்  முயற்சிதான். 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தும், புதிய நியம னங்களை செய்ய மறுக்கின்ற னர். மாறாக, ஒப்பந்த அடிப் படையில் தொழிலாளர்களை அரசு எடுக்கிறது.  இவற்றை கடுமையாக ஆட்சே பித்து வருகிறோம். அடுத்து வரவிருக் கிற ஒப்பந்தத்தில் இந்த பிரச்சனை களுக்கெல்லாம் தீர்வு காண வலியுறுத்து வோம். ஒப்பந்த தொழிலாளர் நியமனத்திற்கு எதிராக வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ளோம். அதன் மீது நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில், ஒப்பந்த தொழி லாளர்களை நியமிக்கக் கூடாது என தொழிலா ளர் துறை இணை ஆணையர் உத்தர விட்டுள்ளார். அதை மீறி நிர்வாகம் செயல்பட்டது. அப்போது தொழிலாளர் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. ஒப்பந்த  முறையில் 250 தொழிலாளர்களை நியமித் துள்ளனர். இது சட்டப்பூர்வமான நியமனம் இல்லை; செல்லாது. ஒப்பந்த பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் கூறுவதை சிஐடியு ஏற்கவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில். அனைத்து சங்கங்க ளும் இணைந்து வேலை நிறுத்தத்தை நோக்கி செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர்  ஆர்.துரை தலைமை தாங்கினார். சம்மேளன  துணைத் தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன், சங்கத்தின் பொதுச் செயலா ளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.