பாசிசம்- நாஜிசத்திலிருந்து உருவான இந்துத்துவக் கோட்பாட்டை அறிய... எதிராக செயலாற்ற... கி.ரமேஷ்
மோடி தலைமையில் பாஜகவின் 3.0 அமைந்து பொறுப்பேற்று விட்டது. அதன் முதல் சில நாட்களிலேயே அது தனது பாதையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது. பசு மாமிசம் வைத்திருந்ததாக பத்து முஸ்லிம்களின் வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மாட்டு வியாபா ரம் செய்யும் இரண்டு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். விதிகளை மீறிய தமது முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறித்து பாஜகவோ அதன் தலைவர்களோ எந்தக் கவலை யும் படவில்லை. இந்த நிலையில் நமக்கு அதன் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும், அரசிய லையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப பணி செய்வதும் அதிகத் தேவையாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக பின்னடைவைச் சந்தித்தாலும், சில மாநிலங்களில் அது புதிதாக நுழைந்துள்ளது என்பதை நாம் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது. பெரியார் பூமி என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிலேயே அது தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொண்டி ருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது.
இந்த நிலையில்தான் தோழர் சுந்தர சோழனின் இந்துத்துவம் புத்தகம் எனக்குக் கிடைத்தது. 2020இலேயே வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் மிக ஆழமாக இந்துத்துவக் கோட்பாட்டை ஆராய்ந்து விளக்கியுள்ளார். முதலில் கூற வேண்டியது அதன் எளிமையான எழுத்துக்கள். அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக அந்தப் புத்தகம் எழுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தையும், கம்யூனிசத்தையும் இந்துத்துவம் வெளிநாட்டுத் தத்துவங்கள் என்று ஏசும். ஆனால் இந்துத்துவா கோட்பாடு முசோலினியின் பாசிசத்திலிருந்தும், இட்லரின் நாஜிசத்தி லிருந்தும் தான் தனது தத்துவத்தையும், அமைப்பை யும் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.
அதனை வடிவமைத்த சாவர்க்கரும், கோல் வால்கரும் அடிப்படையில் மூன்று முக்கியக் கூறு களை முன்வைக்கின்றனர். இந்துத்துவம் கட்ட மைக்கும் பண்டைய வரலாறு, தேசியக் கோட்பாடு அல்லது தேசம் குறித்த வரையறை, அவற்றின் அடிப்படையில் இந்து தேசத்தை உருவாக்குவ தற்கான ஸ்தாபன அமைப்பு ஆகியவையே அவை. இத்தாலிக்கு சென்ற மூஞ்சே என்ற இந்துத்துவத் தலைவர் அந்த இராணுவ அமைப்பை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து இங்கே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்குவதில் பயன்படுத்தினார்.
இந்தியா என்பது பல்வேறு இனங்களை, மொழி களை, கலாச்சாரங்களை இணைத்து உருவாக்கப் பட்ட நாடு என்பதை மறுத்து, ஒரே நாடு, ஒரே பண்டைய வரலாறு, ஒரே இனவியல் என்று நம்ப வைக்கும் முயற்சியில் அது ஈடுபடுகிறது.
இந்தக் கோட்பாட்டை எழுதியவர்களே ஆங்கிலே யர்கள்தான். 1857 சிப்பாய் போராட்டத்தில் இந்துக்க ளும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கிலே யர்களுடன் போராடியதைக் கண்ட அவர்கள் இந்த மோசடிக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில் 19ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் எழுதிய ‘A History of British India’ என்ற நூலில் இந்திய வர லாற்றை இந்துக்கள் காலம், முஸ்லிம்கள் காலம் என்று வகைப்படுத்தினார். அவருக்குப் பின் வந்த வின்செண்ட் ஸ்மித் போன்றவர்களும் இதே வழி யில் எழுதினர். அதை உள்வாங்கிக் கொண்ட இந்துத்துவவாதிகள், இந்துக் காலம் என்றும், முஸ்லிம் காலம் என்றும் பிரித்து ஒரு பிரிவினையை வெற்றிகரமாக உண்டாக்கினார்கள். அதையே நம் தலையில் திணிக்க முயன்று வருகிறார்கள். வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
இந்துத்துவத்தின் முகங்களையும், கோட்பாடு களையும் இந்த நூல் 11 அத்தியாயங்களில் சிறப்பாக விவரிக்கிறது. இந்துத்துவம் என்றால் என்ன, யார் இந்து, இந்துத்துவமும் சாதியும், காந்தி படுகொலை, சிறுபான்மையினர் பிரச்சனைக்கு இந்துத்துவத்தின் தீர்வு, பாசிச இந்திய வடிவம் என்ற பல முக்கியமான பகுதிகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
பாசிச வடிவம் என்று அவர் கூறும்போது, அதன் 14 உட்கூறுகள் என 1995ஆம் ஆண்டு பாசிசம் குறித்த புத்தகங்கள் மீதான விமர்சனம் ஒன்றை எழுதிய உம்பர்டோ இகோ குறிப்பிடுவதை இங்கே கூறுகிறார். அவை மிகவும் பொருத்தமாகவே உள்ளன.
இன்றைய நிலையில் நாம் மேலும் மேலும் பாசிசம் குறித்து அறிந்து கொள்வதும், அதன் விஷமத்தன மான பிரச்சாரங்கள், கோட்பாடுகளிலிருந்து மக்கள் மயங்குவதைத் தடுத்து அறிவூட்டுவதும் இந்திய நாட்டை பாசிஸ்டுகளின் பிடியிலிருந்து விடுவிப்ப தற்குத் தேவையாக இருக்கிறது. முதலாளித்துவம் தோல்வியடைந்துள்ளது என்று தெரிந்தாலும், சமீப காலத்தில் உலகெங்கும் நடந்த தேர்தல்களில் வலது சாரிகள் முன்னேற்றமடைந்துள்ளது மக்களுக்கு மோசமான செய்தியாகும். எனவே நாம் பாசி சத்தை மேலும் அறிந்து கொண்டு செயலாற்ற இந்தப் புத்தகம் ஒரு கையேடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
நூல்: இந்துத்துவம்;
கோட்பாடும் அரசியலும்
ஆசிரியர்:சுந்தர சோழன்
வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம்
பக்கம்: 280
விலை: ரூ.250/-
சாதி ஆணவக் கொலைக்கு எதிராக செயல்பட வழிகாட்டும் நூல் -எம்.ஜே.பிரபாகர்
“சாதி ஆணவக் கொலைகளால் ஒருபோதும் காதலை தடுத்து விட முடியாது”
இந்திய துணை கண்டம் முழு வதும் பறந்து கிடக்கும் கேடுகளில் முதன்மையானது சாதிய பாகு பாடு தான்
தமிழ்நாட்டில் அண்மைக் கால மாக இளவரசன் கொலை, சுரேஷ்- சுதா, கௌசல்யா -சங்கர், நந்தீஸ் - சுவாதி,
பிரியா -ராஜ்குமார்
இது போன்ற ஏராளமான ஆண வக் கொலைகளும், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளும் தொ டர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளது.
ஆணவக் கொலை மற்றும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை கள் குறித்த கள ஆய்வும் தலை யீடும் செய்துள்ளார் நூலாசிரியரும் சாதி ஒழிப்பு முன்னணியின் பொ துச் செயலாளருமான ரமணி.
தலையீடு செய்யும் போது உண்மையறியும் குழு தயாரித்த அறிக்கைகளை தொகுத்து அரு மையான நூலாக்கப்பட்டுள்ளது.
ஆணவக் கொலைக்கு எதிரான சிந்தனை கொண்ட தோழர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை இந்நூல் வழங்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது அதை எப்படி எதிர்கொள்வது? பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு உதவிட இயலும்? சட்ட ரீதியான தலையீடு கள் என்னென்ன உள்ளது? என்பதை பற்றி தெளிவாக இந் நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது.
அதுபோன்று சாதி ஆணவக் கொலை குற்றங்களை தடுத்திட உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த நீதிமன்ற தீர்ப்பு களும் இந்நூலில் இடம் பெற்றுள் ளது.
இரு உயிர்களுக்கு இடையில் இயற்கையாக உருவாகும் காதல் உணர்வை, அன்பை அடித்து நொறுக்கும் ஆதிக்கவாதிகளின் பொய் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த நினைக்கும் தோழர்கள் இந் நூலினை வாசிப்பது கட்டாயம் ஆகும்.
“யாருமே தடுக்கல”
(சாதி ஆணவக் கொலை கள ஆய்வறிக்கைகள்)
நூலாசிரியர்:
வா. ரமணி
விலை: ரூபாய் 250/-
வெளியீடு :
சிந்தன் புக்ஸ்
சென்னை -600014
தொடர்பு எண்:
9445123164.