செங்கல்பட்டு, ஆக.5 நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதிய மாவட்டமாக செங்கல்பட்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனி அதிகாரி யாக ஏ.ஜான்லூயிஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, செங்கல்பட்டை தலைமை இடமாகக் கொண்டு 35 ஆவது மாவட்டம் உருவாக்க ப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கத்துக்கான தனி அதிகாரியாக தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.ஜான் லூயிஸ் நியமிக்க ப்பட்டார். இதற்கான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில் திங்களன்று (ஆக.5) ஏ.ஜான் லூயிஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர் காஞ்சிபுரம் ஆட்சியர் பா. பொன்னை யாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஏ.ஜான் லூயிஸ் தென்காசி மாவட்ட உரு வாக்கத்திற்கான தனி அதிகாரியாக நியமிக்கப்ப ட்டார். பின்னர் செங்கல்பட்டு க்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டுக்கு நியமிக்கப்பட்ட ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் தென்காசிக்கு மாற்றப்பட்டு ள்ளார் என்பது குறிப்பிடத்த க்கது.