tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  சம்பவம் ரஜினிக்கு விரைவில்  சம்மன்....

சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.மக்களுக்கும் சுற்றுச்சூழ லுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர்  13 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூகவிரோதிகளே காரணம் என்று கூறியிருந் தார். இவரின் பேச்சு பெரும்சர்ச்சையையும் எதிர்ப்பை யும் ஏற்படுத்தியது.இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒருநபர் விசாரணை ஆணை யத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.  ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக லாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

;