திருவண்ணாமலை, ஏப்.25- தீக்கதிர் நாளிதழில் 2020-21 கால கட்டத்தில் பெரணமல்லூர் சேகரன் எழுதி தினசரி வெளியான ‘காலத்தை வென்றவர்கள்’ என்னும் கட்டுரைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் நூலாக தொகுத்துள்ளது. இந்த நூல் செய்யாறு ஊராட்சி ஒன்றிய மன்றக் கூடத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் படிப்பு வட்டம்' சார்பில் கல்விக்குழுவின் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் எம். வீர பத்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.பிரபு வரவேற்றார். வாழ்ந்து மறைந்த கவிஞர்கள், இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானி கள், விடுதலைப்போராட்ட வீரர்கள், தியாகிகளான களப் போராளிகள் என அனைவரையும் உள்ளடக்கிய கட்டு ரைகள் இடம்பெற்ற இந்நூலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அணிந்துரை எழுதி யுள்ளார். இந்நூலை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி வெளியிட செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி பெற்றுக்கொண்டு சிறப்பு ரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செய்யாறு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வி.என்.பாபு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ப. பரணீதரன், எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன், கவி ஞர்கள் சோலை பழனி, இஷாக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். படிப்பு வட்ட நிர்வாகி ப.செல்வன் நன்றி கூறினார்.