உலகையே அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் தொற்றின் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து குரங்கம்மை தொற்று 116 நாடுகளில் பரவி மொத்தம் 99,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், குரங்கம்மை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
* குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற வேண்டும்.
* குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
* பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* இது வைரஸ் தொற்று என்பதால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக துவங்க வேண்டும்.
* இத்தகைய அறிகுறியுடன் வரக் கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.