ஓசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் உடல் நலத்திற்கு நீரின் முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாமயை உணர்த்தும் வகையில் காலை 10, நண்பகல் 12 மணி மற்றும் மாலை 3 மணிக்கு என மூன்று முறை மணி ஒலிக்கப்படுகிறது. மணி ஓசை ஒலித்த உடன் அனைத்து மாணவர்களும் தண்ணீர் அருந்துமாறு ஆசிரியர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களின் உடல் நலம் மேம்பாடு அடையும் என்பதால் இந்த தொடர் நிகழ்வை பள்ளியின் தாளாளர் எம்ஜியார் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மேரி ஜேக்கப், நிர்வாக அலுவலர் பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.