சென்னை,ஜூலை 13- மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களைக் கண்டறிந்து அரசுக்கு தெரியப்படுத்துவதுடன், மக்க ளின் குறைகளைக் தீர்க்க முக்கியத்து வம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடி தத்தில், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பில் அரசு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப் பிட்டுள்ளார். மக்களின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங் களை முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீர்மேலாண்மை மூலம் நீராதாரங்க ளைப் பாதுகாப்பதுடன், குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் எனவும், தனியார் பங்களிப்பு டன் நீர்ஆதாரங்களை வளப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள் ளார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங் களை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் அவற்றை நிறை வேற்றும்போது உள்ள சிக்கல்களையும் உடனடியாக களைய வேண்டும் என தலைமைச் செயலாளர் வலியுறுத்தி யுள்ளார்.