வங்கக்கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது கடலில் உள்ள மீன்பிடி படகுகள் விரைவில் கடலுக்கு திரும்புமாறு கடலோர காவல் படை சார்பில் அதன் கப்பல்கள், வானூர்திகள், ரேடார் நிலையங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடலோர காவற்படையினரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.