ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ராணிப்பேட்டை, ஏப். 13 - ராணிப்பேட்டை மாவட் டம், சோளிங்கர் வட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஞாயி றன்று (ஏப். 13) பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது. வட்டார தலைவர் கே. முருகேசன் தலைமையில் சோளிங்கரில் நடைபெற்ற இந்த விழாவில் வட்டார துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் முன்னிலை வகித் தனர். வட்டார பொருளாளர் ஜி. ரங்கநாயகி வரவேற்றார். வட்டார செயலாளர் எம். மனோகுமார் இயக்க செய லறிக்கையை தாக்கல் செய்தார். மாநில பொதுச்செய லாளர் ச. மயில், மாநில துணைத் தலைவர் பி.ஜெ. அமர்நாத், மாவட்டத் தலை வர் கே.ஆர்.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் செ. சரவணன், மாவட்டப் பொரு ளாளர் இ. மின்னி செலினா, மேனாள் வட்டாரச் செய லாளர் த. ரஜினி ஆகியோர் பணி நிறைவு பெற்ற ஆசிரி யர்களை பாராட்டி சிறப்பு ரையாற்றினர். இறுதியாக வட்டார செயற்குழு உறுப்பி னர் பி. வழுதி நன்றி கூறி னார். ராணிப்பேட்டை மாவட் டம் சோளிங்கர் வட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற டி. சுந்தரமூர்த்தி, வி.வீராசாமி, வி. சாலம்மாள், வி.வசந்தி, ஆர்.சி.உதயகுமாரன், எஸ். வேதாச்சலம், கே.எம். ராணி, கே.ஈஸ்வரி, ஆர்.விஜய லட்சுமி, வி.கிரிஜா, எம். கம்சலா, எஸ்.சசிகலா, எம்.தேவி ஆகியோருக்கு பாராட்டு கேடயங்களை மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வழங்கி பாராட்டி பேசினார்..