tamilnadu

அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள்

சென்னை, ஆக. 29- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகளுக்கு தலைப்புகள் பின்வருமாறு:
5-8 வகுப்பு மாணவர்களுக்கு *தேர்வும் நானும்* என்ற தலைப்பிலும் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு *நான் விரும்பும் வகுப்பறை* என்ற தலைப்பிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு *என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது* என்ற தலைப்பிலும் ஆர்வலர்களுக்கு *அரசுப்பள்ளிகள் இணைப்பும் அடைப்பும்* என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு *நின்னா தேர்வு. நடந்தா தேர்வு* என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறும்.. *கல்வி* என்ற பொதுத் தலைப்பில் நடைபெறும் சிறுகதைப் பிரிவில் அனைவரது படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.

போட்டி விதிமுறைகள்
♦ ஏ 4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும்.
♦ கவிதை இருபது வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
♦ சிறுகதை 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
♦ ஒருவர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும்.
♦ சொந்த படைப்பாகவும்  புதியதாகவும் இருக்க வேண்டும்.
♦ படைப்புகளை எழுதி தபாலில் அனுப்பலாம் அல்லது தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கலாம்.
♦ பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
♦ ஒவ்வொரு பிரிவிற்கும் மாவட்ட, மாநில அளவுகளில்  மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
♦ பரிசு பெற்ற படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுவிழுது: இருமாத கல்வி இதழில் வெளியிடப்படும்.
♦ படைப்புகளை செப்., 15 க்குள் மாநில ஒருங்கிணைப்பாளர்   முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
♦ படைப்புகள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் தின போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்..  நேரடியாக மாநில ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் நிராகரிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு
ச.தீனதயாளன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆசிரியர் தின போட்டிகள்-2019
பள்ளிக்கூட சாலை, முகையூர் & அஞ்சல்
செய்யூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்-603305
செல்: 9444869679
மின்னஞ்சல்: tnsf.kalvikulu@gmail.com