சென்னை, டிச. 27 - மொழிபெயர்ப்புக்காக தமுஎகச மாநில துணைத் தலைவர் மயிலை பாலுவுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி )சார்பில் நடைபெறும் 47வது சென்னை புத்தகக் காட்சியை ஜன.3 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை வழங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சிறப்புரையாற்றுகிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது – 2024 பெறு வோர் விவரத்தை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, உரை நடைக்கு பேரா. ஆ.சிவசுப்பிரமணியன், கவிதைக்கு உமா மகேசுவரி, நாவலுக்கு தமிழ்மகன், சிறு கதைக்கு அழகிய பெரியவன், நாடகத்திற்கு வேலு சரவணன், மொழி பெயர்ப்புக்கு மயிலை பாலு ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.