அருந்ததியா் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி. அருந்ததியர் சமூகத்தினர் மீது அதிமுகவுக்கு ஏன் இந்தத் திடீர் பாசம் எனத் தெரியவில்லை. அந்த சமூகத்துக்கு திமுக அரசு உள் ஒதுக்கீடு வழங்கிய நேரத்தில், ஜெயலலிதா எதிர்த்த வரலாற்றை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். ‘ஆதிதிராவிடர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது; அருந்ததியர் மக்களை ஏமாற்றும் செயலில் திமுக ஈடுபடுகிறது’ என்றெல்லாம் ஜெயலலிதா கூறினார். அதையெல்லாம் அருந்ததியர் சமூக மக்கள் மறக்கமாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் மதிவேந்தன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.