tamilnadu

img

சுதர்சன் பத்மநாபனின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு தற்கொலை

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத் தலைவர் சுதர்சன் பத்மநாபனின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் திருவண்ணாமலையில்  அமைப்பின் நிர்வாகி அப்துல்காதர் தலைமையில்  ஆர்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், பாரி, ராமதாஸ், ரவி, என்.வெங்கடேசன், இலியாஸ் சர்க்கார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லூர்து மேரி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.பிறகு பாத்திமாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.