ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் பேருந்து நிலையம் முதல் சானடோரியம் சித்த மருத்துவமனை வரை தண்ணீர் குழாய் புதைக்கும் பணி முடிந்தும் சாலையை சீரமைக்கப்படாமல் இருந்தது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு தார்ச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.