tamilnadu

img

நீட் தேர்வை ரத்து கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், தேர்வு நடத்துவதில் இருந்து தேசிய தேர்வு முகமை எனும் தனியார் நிறுவனத்தை நீக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக  மத்திய அரசை கண்டித்து  கடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சிவானந்த் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் எஸ். குமரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பி.சௌமியா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவநந்தினி, பூபதி, ஞானப்பிரகாஷ், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.