tamilnadu

img

சாலையோர வியாபாரிகள் போராட்டம்

சாலையோர வியாபாரிகள் போராட்டம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் செயல்படும் 5வது மண்டல சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செவ்வாயன்று (ஏப்.16) என்எஸ்சி போஸ் சாலையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை மாநகராட்சி சிறுகடை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு டி.எஸ்.ஜமால் தலைமை தாங்கினார். சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், நிர்வாகிகள் இ.எம்.முஸ்தபா, பி.மணிமாறன், எம்.மணி, ஆர்.குமார், எம்.தேவன்,  கே. முருகேசன், டி.ஸ்ரீகுமார், அப்துல் சமது ஆகியோர் பேசினர் இதில்  தலைவர் கே.மனோகரன்,  துணைத்தலைவர் வி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான திங்களன்று (ஏப்.14) சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் உள்ள 60 குழந்தைகளுக்கு புத்தகப் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை சார்பில் இந்த பைகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப்பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டத் தலைவர் கே.மணிகண்டன், பிஎஸ்என்எல் இயூ அகில இந்திய உதவிப் பொதுச்செயலாளர் எஸ். செல்லப்பா, சென்னை மாநிலச் செயலாளர் எம். ஸ்ரீதர சுப்ரமணியன், தமிழ்நாடு மாநில சென்னை மாவட்டச் செயலாளர் கே. சீனிவாசன், ஓய்வூதியர் சங்க அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் கே.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திங்களன்று (ஏப்.14) அனகாபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஹேமக்குமார், ப.ரேவதி மற்றும் ரமேஷ்பாபு, கோபால் உள்ளிட்டோர் பேசினர்.

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப்.15) காமராஜபுரத்தில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ஜெயவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், தொகுதிச் செயலாளர்  தா.கிருஷ்ணா, தொகுதிக் குழு உறுப்பினர்கள் அனுராதா, அணில்குமார், செம்பாக்கம் கிளைச் செயலாளர் இ.குழந்தைசாமி உள்ளிட்டோர் பேசினர்.