காஞ்சிபுரம், ஜூன் 28- காஞ்சிபுரம் மாவட்ட த்தில் செயல்பட்டு வந்த சோவல் இந்தியா மற்றும் டாங்சன் தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளதால் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சங்கம் சார்பில் 2வது நாளாக வெள்ளியன்று அவாஸின் நிறுவனம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில், சோவல் இந்தியா, டாங்சன் தொழிற்சாலைகளில் வேலை இழந்த தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2 வாரத்திற்குள் கோரிக்கை மனுவிற்கு பதில் தருவதாக ஆலை நிர்வாகம் கூறியது. இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்ப ட்டது. இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் பகத்சிங் தாஸ், சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்