tamilnadu

ஆளுநருக்கு சட்டப்பேரவையில் எச்சரிக்கை

சென்னை,நவ.18- ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பு வதற்குத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவ.18 அன்று நடைபெற்றது.

அப்போது, தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறை வேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றி னார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சித்தலை வர்கள் உரையாற்றினர்.

அராஜகத்தை முறியடிப் போம்! நாகை மாலி (சிபிஎம்) : முதல்வர் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமை யாக ஆதரிக்கிறது. கோடிக் கணக்கான மக்கள் வாக்களித்து மக்களால் ஜன நாயக பூர்வமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அரசு இது.  ஏழு கோடி மக்க ளின் மனசாட்சி இந்த அரசு. பாரம்பரியமான வர லாற்று பெருமைகளை கொண்ட இந்த தமிழ்நாடு அரசு, எத்தனையோ ஆளு நர்களை கண்டுள்ளது இந்த தமிழ்நாடு. பல நேரங்களில் சில ஆளுநர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட துண்டு.

ஆனால், சகல ஜன நாயக மாண்புகளையும் புறம் தள்ளிவிட்டு அராஜக மான முறையில் செயல்படும் ஆர்.என். ரவி போல் ஒரு ஆளுநர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இருந்தது கிடையாது என்பதுதான் வரலாறு. எந்தவிதமான அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை. அரசியல் சட்டம் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. ஆகவே, எந்தவிதமான அரசியல் அதிகாரமும் இல்லாத ஒருவர், சகல அதிகாரத்தையும் கையில் எடுப்பேன் என்று முயற்சிப்பதை இந்த மாமன்றம் இனிமேலும் அனுமதி கூடாது. அனு மதிக்காது என்று கருது கிறேன். இதுதான் ஆளுநர் ரவிக்கு நாம் தருகிற இறுதி எச்சரிக்கையாகும்.

ஆர்எஸ்எஸ்  அலுவலகமா? ராஜ்பவன்

டி.ராமச்சந்திரன் (சிபிஐ): ஆளுநரை தங்கள் கருவியாக வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு, மாநில அரசுகளை முடக்கி வருகிறது. ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சி யாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆளுநர் அலு வலகத்தை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக ரவி மாற்றி செயல்பட்டு வருகிறார். மாநில அரசுகளின் செயல்பாடுகள் முடக்கும் வகையில் செயல்படும் ஆளுநர் குடியரசுத் தலை வர் திரும்பப் பெற வேண்டும்.

கடமை தவறிய ஆளுநர்!

வேல்முருகன் (தவாக) :  முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். பெரி யார், அண்ணா, கலை ஞர் என்ற பெயரை கேட்டாலே ஆளுநருக்கு கசக்கிறது. உச்சநீதிமன்ற கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அடிப்படையில் செயல்படும் ஆளுநர் நடவடிக்கைகளை ஜனநாயக மாண்பை களுக்கு எதிராக உள்ள தால் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழி யில்லை.

செயல்பாட்டை முடக்கும் ஆளுநர்!

ஈஸ்வரன் (கொம தேக) : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டு செயல்பட கூடியவர் தான் ஆளுநர். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியது உண்டா? என்றால் இல்லை. ஆனால், அந்த பொறுப்புகளை முற்றிலும் மீறி செயல்படு கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களை முடக்கு வதில்தான் ஆர்வம் காட்டு கிறார்.

‘போராட வேண்டி யுள்ளது சிந்தனை செல்வன் (விசிக) : சொந்த சாதி, மத நலனை விரும்புபவர்கள் தேச நலனுக்கு ஆபத்து என அம்பேத்கர் பேசியதை நினைவு கூறுகிறேன். 9 கோடி மக்களின் உரி மைக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது. ஆளுநரின் நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்டுள்ள சவால்.