சென்னை,நவ.4- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலை யில், வாக்குச்சாவடி அலுவலர்களிட மும், தேர்தல் துறையின் இணைய தளத்தின் வாயிலாகவும் விண்ணப் பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்வதற்கு 1,914 படிவங்களும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள் ளேயே முகவரியை மாற்றுவதற்கு 19 ஆயிரத்து 36 படிவங்களும் அளிக்கப் பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங் களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அளித்தா லும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நவ.4 சனிக் கிழமை காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வாக்காளர் கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று அங்கு வைக்கப் பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து வருகிறார்கள்.
பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள் உரிய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்க லாம். இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்றும்
இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக் கிழமையும் (நவ.5) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண் டுள்ளார்.