துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
சென்னை,பிப்.21- மாநில நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுக் கொள்கையை வகுப்பதற்கான விரைவான நடவ டிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று துணைமுதல மைச்சரும் வீட்டுவசதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெள்ளியன்று கிரடாய் வீட்டுமனை கண்காட்சியை தொடங்கி வைத்துப்பேசிய அவர், தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், வீடுகள் வழங்குவதற்கு முக்கியத்து வம் அளிக்கிறது. பொருளாதார ரீதி யாக பின்தங்கிய பிரிவு மக்கள் அனை வருக்கும் வீட்டுவசதி வழங்குவதற்கும், நிதி மேலாண்மை மற்றும் வீட்டுவசதி வழங்குவதில் நிலைத்த தன்மை இருப்பதற்கும், தொலைநோக்கு திட்டம் 2023, வழிவகை செய்கிறது என்றார். மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்க ளுக்கு தேவைப்படும் நிலங்களை ஈடு செய்யவும், தற்போது நடைமுறையில் இருக்கும், நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு மாற்றாக, “நில சேர்ம பகுதி வளர்ச்சித் திட்டம்” செயல்பட ஏதுவாக, தமிழ்நாடு நகர் ஊர மைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் உரிய விதிகள் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளது என்றும் அவர் கூறினார். கிரடாய் பெண் அமைப்பினர் பத்திர பதிவு தொகையை குறைப்ப தற்கான கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், சிங்கிள் விண்டோ சிஸ்டம் செயல்படுத்து வதற்கு ஏற்கெனவே கிரடாய் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்தும் உரிய அதிகாரி களிடம் கலந்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் பன்னீர் செல்வம். வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, எம்எம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன்,கிரடாய் நிர்வாகிகள் ஹபீப். ஸ்ரீதரன், மெவுல் தோஷி, பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலா ளர் வினய் எம். டான்சே உள்பட பலர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.