tamilnadu

img

விபத்துகளை குறைக்க  சோலார் எச்சரிக்கை விளக்கு காஞ்சிபுரம்

விபத்துகளை குறைக்க  சோலார் எச்சரிக்கை விளக்கு காஞ்சிபுரம்

, ஜூன் 15- காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்துக்களை குறைக்க பல்வேறு இடங்களில் சோலார் இணைப்புடன் கூடிய எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலை காஞ்சிபுரம் வந்தவாசி சாலை ஆகியவற்றில் அதிக அளவு வாகன போக்குவரத்து உள்ளது. தொழிற்சாலை வாகனங்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், விபத்துக்களை குறைக்கும் வகையில் முக்கிய விபத்து பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சோலார் இணைப்புடன் கூடிய எச்சரிக்கை மின்விளக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அந்தவகையில், காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில், கீழ்பெரமநல்லூர், ஆர்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 3 எச்சரிக்கை விளக்குகளும், காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் செவிலிமேடு சந்திப்பு பகுதியில் 2 எச்சரிக்கை விளக்குகளும் பொருத்தப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் வகையில் சோலார் பேனல்கள் உடன் இது அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு கவனத்துடன் வாகனத்தை செலுத்த ஏதுவாக உள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். வாலிபர் சங்க பகுதி மாநாடு சென்னை, ஜூன் 15 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி 18வது மாநாடு ஞாயிறன்று (ஜூன் 15) தரமணியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் ச.ராகேஷ் தலைமை தங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் எம்.சி.கிருஷ்ணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் உ.பூவரசன் வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் யுவஸ்ரீ அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.நிவேதா துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை பகுதிச் செயலாளர் என்.குமரனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் த.கௌதமும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் நிறைவுரையாற்றினார். பெரியார் நகர் கிளைத் தலைவர் கோபி நன்றி கூறினார். 13 பேர் கொண்டு பகுதிக் குழுவின் தலைவராக ச.ராஜேஷ், செயலாளராக என்.குமரன், பொருளாளராக த.கௌதம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.