சென்னை,ஜூன் 14- தமிழில் சோசலிச எதார்த்தவாத படைப்புகளை உருவாக்கிய முன் னோடிகளில் ஒருவர் எழுத்தாளர் தோழர் கு.சின்னப்ப பாரதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முதுபெரும் முற்போக்கு எழுத்தா ளர் தோழர் கு. சின்னப்ப பாரதி (88) மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றி யவர். தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் நில உச்சவரம்பு கோரி கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற நடை பயணக்குழுவில் இடம்பெற்றவர். இறுதிவரை உறுதி யான மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர். செம்மலர் இலக்கிய மாத இதழை துவக்கியவர் தோழர் கு.சி.பா. பின்னர் அந்த ஏட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தார்.
முதுபெரும் எழுத்தாளர் தோழர் கு.சின்னப்ப பாரதி (88) திங்களன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் செவ்வாயன்று (ஜூன் 14) நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். |
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம் சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய ஏழு நாவல்களையும் ஏராள மான சிறுகதைகளையும், கவிதை களையும் எழுதி குவித்தவர் தோழர் கு.சி.பா. கள ஆய்வுகள் மூலம் நாவல்களை உருவாக்கும் ஆற்றல்படைத்த கு.சி.பா. கொல்லிமலை மலைவாழ் மக்கள் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு சங்கம் நாவலை படைத்த தோடு, மேற்குவங்க மாநிலம் அசன் சோல் சுரங்கப்பகுதிக்குச் சென்று தங்கியிருந்து சுரங்கத் தொழி லாளர்களின் வாழ்க்கையை ‘சுரங்கம்’ என்ற நாவலாக படைத்து தந்தவர். தமிழில் சோசலிச எதார்த்தவாத படை ப்புகளை உருவாக்கிய முன்னோடி களில் ஒருவர். இவருடைய படைப்புகள் இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், சிங்களம் உள்ளி ட்ட வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தில்லி தமிழ்ச் சங்க விருது, உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது, கலை ஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட ஏரா ளமான விருதுகளை பெற்றுள்ளார். தம்முடைய பெயரில் இலக்கிய விருதுகள் வழங்குவதற்காக அறக் கட்டளை ஒன்றைத் துவக்கி ஏராள மானோருக்கு விருதுகள் தந்த அவர், பின்னர் இந்த அறக்கட்டளையை தமுஎகசவிடம் ஒப்படைத்தார். தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதி ரிபாத், என். சங்கரய்யா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களால் போற்றி பாராட்டப்பட்டவர். தமிழக முற்போக்கு இலக்கிய உலகின் முகங்களில் ஒருவ ராக செயல்பட்ட தோழர் கு. சின்னப்ப பாரதி தன்னுடைய படைப்புகளின் வழி யே என்றென்றும் நினைவுகூரப் படுவார். அவரை இழந்து வாடும் அவரது மகள்கள் பாரதி, கல்பனா ஆகி யோருக்கு கட்சியின் சார்பில் ஆறு தலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.