சென்னை, ஆக. 14- தமிழ்நாட்டில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங் களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற் கான மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடு பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர் அழுத்த பிரிவில் இடம் பெறும் 11 ஆயிரம் தொழிற்சாலை களில் மட்டும் ஆளில்லாமல் கணக்கெடுக் கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடி வில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. மின் கணக்கெடுப்பு தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டண விவரம் அனுப்பப்படுகிறது.
அதேபோல், தாழ்வழுத்த பிரிவில் இடம்பெற்ற வீடு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை, தி.நகரில் 1.42 லட்சம் வீடுகளின் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது தாழ்வழுத்த தொழிற்சாலைகளை உள்ள டக்கிய தொழில் நிறுவனங் களில் மொபைல் போன் செய லியில் கணக்கு எடுக்கப்படு கிறது. இதற்குப் பதிலாக, இங்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மொத்தம் உள்ள 60 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் முதற்கட்டமாக 25 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப் பட உள்ளன. அந்த மீட்டரில் சிம் கார்டு பொருத்தி அலுவலக சர்வருடன் இணைக்கப்பட உள்ளது.
இதற்காக, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம் கார்டு வாங்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடு பட்டுள்ளது. மேலும், மின் கணக்கீட்டுக் மென்பொருளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிம் கார்டு மூலம் கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.