காப்பீட்டு பிரிமியம் மீது மத்திய அரசு விதித்துள்ள 18 விழுக்காடு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னைபகுதி-1ன் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிடம் அமைப்பின் நிர்வாகிகள் கையெழுத்து பெற்றனர்.