tamilnadu

img

பாலியல் வன்கொடுமை: அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஏப். 26-பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து, சம்பந்தப் பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பொள்ளாச்சி விபரீதம் முடியும் முன்பே பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட புகார் இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளிவந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அறிக்கை ஒன்றில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து – அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த அனைவ ரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திடவும், “பொள்ளாச்சி பாலியல் வழக்கை” விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

;