சித்தூர் பேருந்து நிலையம் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து குடி யாத்தம், ஆற்காடு, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூ ரிக்கு செல்லும் மாணவர்கள் என ஆயிரக்கணக் கானோர் தினசரி சென்று வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பேருந்தில் செல்பவர்கள் இருசக்கர வாக னத்தில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிக ளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனிடம் வலியுறுத்திய போது, அந்த நேரம் கண் துடைப்பிற்கு சரி செய்த னர். அமைச்சர் கூறியும் மாநகராட்சி அதி காரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த கால்வாயை சரி செய்து கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.