tamilnadu

வானியல் ஆய்வுக்கு செயற்கைக்கோள்

சென்னை,டிச.30- வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வ தற்காக எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்விசி-58 ராக்கெட் மூலம் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு  தினமான ஜனவரி 1 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்து கிறது.

தற்போது ராக்கெட், செயற்கைக் கோள் பாகங்கள் ஒருங்கிணைப்பு, சோதனை ஓட்டம் போன்ற செயல்பாடுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட ஏவுதலின் இறுதிகட்ட பணி களுக்கான கவுன்ட் டவுன் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 31) தொடங்க வுள்ளது.

விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படும் 2-வது செயற்கைக் கோளான எக்ஸ்போசாட் 469 கிலோ  எடை கொண்டது. இதன் ஆயுட்கா லம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக போலிக் (எக்ஸ்ரே போலரிமெட்டரி), எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட் ரோகிராப்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை விண்வெளியில் பரவும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட் ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை ஆராயும். மேலும், ஒரே நேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல் பாடு களையும் ஆய்வு செய்ய முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி கள் தெரிவித்தனர்.

பரிசோதனை முயற்சி
இது தவிர பிஎஸ்எல்வி ராக் கெட்டின் இறுதிப் பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் எனும்  பெயரிலான பரிசோதனை முயற்சி 3-வது முறையாக மேற்கொள் ளப்பட உள்ளது. அதன்படி பிஎஸ்  4 இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப் பட உள்ளன.

இவை செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் பிஎஸ் 4 இயந்திரம் உதவியுடன் பூமியை  வலம் வந்து அடுத்த சில மாதங் களுக்கு ஆய்வுகளை மேற்கொள் ளும் என்பது குறிப்பிடத்தக்கது.