tamilnadu

img

பள்ளியில் சனாதன, ஆபாச பிரச்சாரம் மாணவர் சங்கம் மறியல் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம்; அரசு நடவடிக்கை

சென்னை, செப். 6 - சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள  அரசுப் பள்ளிகளில், சனாதனம்,  ஆபாச பிரச்சாரம் செய்யப்பட்ட தைக் கண்டித்து இந்திய மாண வர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை யன்று (செப்.6) முற்றுகைப் போரா ட்டம் நடத்திய பின்னணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர். 

சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி  மற்றும் சைதாப்பேட்டை மாடல்  பள்ளிகளில் ஆகஸ்ட் 28 அன்று  ‘நன்னெறி கல்வி’ என்ற போதனை  வகுப்பு நடந்துள்ளது. ‘பரம்பொருள் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் பேசியுள்ளார். டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்த இந்த நபர் தற்போது மதக் கருத்துக் களைப் பிரச்சாரம் செய்து வரு கிறார்.

அரசுப் பள்ளிச் சொற்பொழிவு களில் பேசிய மகாவிஷ்ணு அறி வியலுக்கு புறம்பாக, ஆபாச கருத்துக்களோடு, சனாதனத்தை நியாயப்படுத்தியுள்ளார். 

“அழகில்லாத பெண்கள், இப்போது ஊனமுற்றவர்களாக இருப்பவர்கள் அனைவரும் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்; அந்தப் பாவத்திலிருந்து விடுபட உங்களுக்கு யோக தீட்சை தரு கிறேன்; நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது’’ எனக் கூறியுள்ளார். மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து, பாடலை ஒலிக்க விட்டு அவர்களின் உணர்வு களைத் தூண்டும் வகையில் பேசி யுள்ளார். அப்போது, மாணவியர் பலர் உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளனர். 

இதற்கு அங்கிருந்த, பார்வை மாற்றுத்திறன் ஆசிரியரான சங்கர் என்பவர், “பள்ளியில் வந்து மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்களே?” எனக் கேள்வி எழுப்பி ஆட்சேபம் எழுப்பியுள்ளார். இதற்காக, ஆசிரியர் சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகா விஷ்ணு, அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.  பிற ஆசிரியர்களை யும் அவமரியாதை செய்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் வீடியோவை யும் மகா விஷ்ணுவே அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலை யில், மாநிலம் முழுவதும் கடும்  கண் டனங்கள் எழுந்தன. அரசுப் பள்ளி யில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது ஏன்?, மூட நம்பிக்கை பேர்வழியான மகாவிஷ்ணுவைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை கள் எழுந்தன.

இந்திய மாணவர் சங்கம் மறியல்

குறிப்பாக, கல்வி நிலையத்தில் நடைபெற்ற  மதப்பிரச்சாரத்தை கண்டித்தும், நிகழ்வுக்கு அனுமதி அளித்த பள்ளி கல்வித்துறை அதிகாரி கள், தலைமை ஆசிரியர் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும், மதச்சார் பின்மையை பாதுகாக்க வேண்டும் என வலி யுறுத்தியும் அசோக் நகர் பள்ளி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ். ஆனந்த் தலைமை யில் மறியல் நடைபெற்றது.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இந்நிலையில், இதே பள்ளியில் நடை பெறும் நிகழ்ச்சிக்காக வந்திருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர் சங்கத் தலை வர்கள் கோ. அரவிந்த்சாமி, எஸ். ஆனந்த் உள்ளிட்டோரை அழைத்துப் பேசினார். 

“இதுபோன்ற தவறுகள் இனி நிகழாது. உங்களின் உணர்வோடுதான் நானும் இருக்கிறேன். இந்த நிகழ்வுகள் குறித்து விசார ணை நடத்தி, தொடர்புடையவர்கள் யாராக  இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது எடுக்கும் நடவடிக்கை முன்னு தாரணமாக இருக்கும்” என்றார்.

கேள்வி எழுப்பிய ஆசிரியர் கவுரவிப்பு

பின்னர்,‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ எனும் தலைப்பில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பெண் குழந்தைகள் படிக்க வேண்டும், சுயமரியாதையுடன் இருக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் எனக் கூறியவர் தந்தை பெரியார். அறிவைப் பகுத்தறிவாக உணர வேண்டிய இடம் பள்ளிக்கூடம் தான். அதனால்தான் தன்னுடைய இரு கண்களையும் பறிகொடுத்து இருந்தாலும், தனக்கு கண்ணாக இருக்கும் கல்வியைக் கொண்டு, பிற்போக்கு கருத்து சொல்பவருக்கு எதிராக துணிச்சலுடன் எழுந்து நின்று ’நீ சொல்லும் கருத்து தவறு’  என்று தமிழாசிரியர் சங்கரால் சொல்ல முடிந்தது. அவரை நினைத்துப் பெருமைப்படு கிறேன். 

நம்முடைய பிள்ளைகள் இந்த இடத்திற்கு வந்த பின்பு அவர்கள் நம் பிள்ளைகள், பள்ளி வளாகம் இது என்னுடைய சொத்து, யார் வர வேண்டும், வரக்கூடாது, எப்படிப்பட்ட அறிவு சார்ந்தவரை அழைக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும்.

மாணவர்கள் பகுத்தறிந்து பார்க்க வேண்டும்  யார் என்ன கருத்து சொன்னாலும் அது சரியா தவறா என்பதை உணர வேண்டும். ஏன் என்ற கேள்வி கேட்க வேண்டும். பெண்கள்  பகுத்தறிவோடு சிந்தித்து ஒவ்வொரு முடிவை யும் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மதவாதப் பிரச்சாரப் பேர்வழி மகா விஷ்ணு வை கேள்விக்குள்ளாக்கிய பார்வை மாற்றுத் திறன் ஆசிரியர் சங்கரையும் கவுரவித்தார்.

4 நாட்களுக்குள் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “அசோக் நகர்  பள்ளியை பொறுத்தவரை பல முன்னெடுப்பு கள், பல சாதனைகளை, பல வரலாறுகளைப் பெற்றுள்ள பள்ளி. அதையும் தாண்டி இப்படிப் பட்ட நிகழ்வு நடந்துள்ளது வேதனைக்குரியது என்று சொல்வதைக் காட்டிலும் இது கண்டிக்கக் கூடியது என்பதை ஒரு அமைச்சராக நான் பதிவு செய்கிறேன்.

அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்ற பெயரில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய விவகாரத்தில் நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காத வகையில் இருக்கும்.

4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். ஆசிரியர் புகார் கொடுக்கிறாரா, இல்லையா? என்பது அவரது விருப்பம். என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம். அவர் மீது  உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்” என்றார்.

பாத பூஜை நடத்தியது  பற்றியும் விசாரணை!

தவறான கருத்துப் பிரச்சாரம் நடந்த அதேபள்ளியில் தற்போது முற்போக்கு கருத்துப் பிரச்சாரம் செய்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் இனி கல்விசாரா நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது.

மேலும், “ஆசிரியர் தினத்தையொட்டி ஒரு பள்ளியில் ஆசிரியர்களின் பாதத்தை மாணவர்களை கழுவ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கோடம்பாக்கம் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறைக்கு பிற ஆசிரியர்கள் செருப்பு அணிந்து வர தடை உள்ளது குறித்து விசாரிக்கப்படும்.

பிள்ளையார் விழாவையொட்டி மாண வர்கள் உறுதிமொழி ஏற்பு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமான சுற்றுச்சூழல் துறை செயலாளர் மீது நட வடிக்கை எடுக்க தலைமை செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.

தலைமை ஆசிரியர்கள்  பணியிட மாற்றம்!

இதனிடையே, ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக இரு பள்ளி தலைமை ஆசிரியர் களும் பதிலளிக்க கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. மேலும், அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை பள்ளித் தலைமை ஆசிரியர் கே. சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம், அணைக் கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள்  போராட்டம் - புகார்!

இதனிடையே, மகாவிஷ்ணுவைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் சைதாப்பேட்டையில் அரசுப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் எம். குமார் (தென்சென்னை), எஸ். மனோன்மணி (மத்திய சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தோ. வில்சன் அளித்துள்ள புகாரில், “சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் ஆக.28 அன்று பேசிய மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதற்கு காரணம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிம்தான் என்று அறிவியலுக்கு புறம்பாக, மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும் படி பேசியுள்ளார். அவர் மீது மாற்றுத்  திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் படியும், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016, பிரிவு 72(அ)வின் படியும்  கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டி ருந்தார்.

அதன் பேரில், அசோக் நகர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்திய சைதாப்பேட்டை போலீசார், மூடநம்பிக்கைப் பேர்வழி மகாவிஷ்ணு மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்தும், அவரைக் கைது செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்குழு அமைப்பு

இதற்கிடையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்த குழு முழுமையாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பிறகு, அரசின் பள்ளிக் கல்வித்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அரசுப் பள்ளி வளாகத்திற்குள், இனி அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை  விதிக்கப்படும்” என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் கூறியுள்ளார். “தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. அரசு உத்தரவை மீறினால் தலைமை  ஆசிரியருடன், முதன்மைக் கல்வி அலுவலரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்” என்றும் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிலளிக்க உத்தரவு

மூடநம்பிக்கைப் பேர்வழி மகாவிஷ்ணுவை அழைத்து நிகழ்ச்சி நடத்தியது குறித்து, விளக்கம் அளிக்குமாறு சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை  தமிழரசி ஆகியோருக்கு  சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார். 

“கல்விக்குச் சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ. மதுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூடநம்பிக்கைப் பிரச்சார பேர்வழி மகா விஷ்ணுவின், பரம்பொருள் பவுண்டேசன் செயல்படும் திருப்பூர் குளத்துபாளையம் அலு வலகத்திலும் போலீசார் வெள்ளிக்கிழமை யன்று விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திமுக மாணவர் அணி தீர்மானம்!

கல்வியின் குறிக்கோள் மூடநம்பிக்கையும், முட்டாள்தனத்தையும் ஒழிப்பதாக இருக்க  வேண்டும் என்பது பெரியார் கொள்கை. பெரியார் வழியில் திமுக அரசு கல்வித்துறை யில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரு கிறது. அண்மைக் காலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்களிடத்தில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடிக்க வேண்டும் என திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.