கிருஷ்ணகிரி, அக்.30- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி அருகில் உள்ள சாணமாவு தலித் மக்களுக்கு 1999 ஆம் ஆண்டில் 41 வீட்டு மனைப் பட்டா சர்வே எண். 12/2 ல் 2.75 ஏக்க ரில் அரசால் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடியமர்த்த காலதாம் ஏற்பட்டது. இதனால், 2006 ஆம் இந்த இடத்திற்கு தனிநபரால் சொந்தம் கொண்டாடி வழக்கு போடப்பட்டது. அரசு அதிகாரிகள் தனிநபர் மீது நட வடிக்கை எடுக்காமல் மறைமுகமாக அவருக்கு ஒத்துழைத்ததால் சாண மாவு தலித் பட்டாதாரர்கள் 2017 ல் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் இன்னும் தனி நபருக்கு ஆதரவு தரும் நிலையிலேயே உள்ள னர். எனவே சாணமாவு தலித் மக் களை பட்டா நிலத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்தங்கரை வட்டம் ரெட்டிபட்டி யில் 1944 முதல் 42 ஆண்டுகளாக தோட்டி மானியத்திலிருந்த 120 ஏக்கர் நிலத்தில் 1986 ல் 40 ஏக்கர் நிலம் தலித் அல்லாத தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.33 ஆண்டுகளாக போராட்டங்கள் மனுக்கள் என தொடர்ந்து முயற்சிகள் செய்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை எனவே தனி நபரால் மோசடியாக ஆக்கிர மிக்கப்பட்டுள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்
ஓசூர் வட்டம் சூடுகொண்டப் பள்ளியில் 2018 நவம்பரில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்திஸ் குடும்பத்திற்கு சட்டப்படி வழங்குவதாக கூறிய மாத உதவித் தொகை ரூ. 5000 இது வரை வழங்கப்படவில்லை. நந்திஸ் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை சட்டப்படி மாவட்ட நிர்வாகம் இன்னும் வழங்காமல் உள்ளது. மாத உதவித் தொகை, நிலுவை தொகை யையும் சேர்த்து வழங்க வேண்டும். அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும். காமன்தொட்டியில் அடுத்தவர் நிலத்திற்கு சாலை அமைக்க ராஜப்பா என்ற தலித் பூசாரியாக இருந்த தலித்களின் கோவிலை இடிக்க தலித்துக்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டனர். அவர்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த கோவில் பூசாரி ராஜப்பா கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் வனப் பகுதியில் இறந்து கிடந்தார். இது திட்டமிட்ட கொலையாகும். எனவே, வட்ட, மாவட்ட காவல் துறையினர் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குடும் பத்தினர் மனு கொடுத்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தியும் இதுவரை காவல்துறையின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாகவே உள் ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு சிபிசிஐடி மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும்,
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை கட்டுவதற்காக 1952 ல் சொந்த நிலம், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, சூளகிரி பகுதியில் கொட்டாயூர், ஏரி எப்ளம், டேம் எபளம், கோயில் எப்ளம், சிகர லப்பள்ளி, உட்பட 10க்கும் மேற் பட்ட ஊர்களில் குடியமர்த்தப்பட்ட னர். 68 ஆண்டுகள் கடந்தும் குடிய மர்த்திய அரசே பட்டா கொடுக்கா மல் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டா கேட்டு சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரம்மாண்டமான காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.60 நாட்க ளில் பட்டாக்கள் கொடுத்து விடுவ தாக மாவட்ட வருவாய் அலுவலர் கடிதமும் கொடுத்தார். ஆனால் 2 மாதங்கள் முடிந்தும் பட்டாக்கள் வழங்காததால் மாவட்டம் முழுவ தும் உள்ள மக்களை திரட்டி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி யில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனுவும் கொடுக்கப்பட்டது. மூன்று மாதங் கள் முடிந்தும் பட்டாக்கள் கொடுக் கப்படவில்லை. இந்த கோரிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் தலைமை யில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, தலைவர் ஆனந்த குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், சூள கிரி வட்டச் செயலாளர் எஸ்.முனி யப்பா, ஊத்தங்கரை சிபிஎம் வட்டச் செயலாளர் மகாலிங்கம், பாதிக்கப் பட்ட நந்திஸ்,ராஜப்பா குடும்பத்தி னர், சாணமாவு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சி யர் பிரபாகர் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். தொடர் முயற்சியின் முதல் வெற்றியாக சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்திஸ் குடும்பத்திற்கு அரசாங்கத் தால் கொடுக்கப்பட வேண்டிய மீதம் 4,12,500 உடனடியாக கிடைத்துள்ளது.