tamilnadu

img

ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான மின் கட்டணம் அரசு புதிய அறிவிப்பு

சென்னை, ஆக. 22- தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாகஉள்ளது. இதில் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடி யிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை இணைப்புகளாகும்.

நுகர்வோர் பயன்படுத்தும் மின்சா ரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படு கிறது. ஒன்றிய அரசின் உத்தரவுப்படி ரூ. 10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்த னையை ரொக்கமாக பெறக் கூடாது. 

இந்நிலையில், தற்போது 83 விழுக் காடாக உள்ள மின்னணு (டிஜிட்டல்) பரி வர்த்தனையை 100 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவ தற்காக ரூ. 10 ஆயிரம் என்ற ரொக்கம் ரூ. 5ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் இனி ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின் கட்டணத் தொகையை காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதே நேரம், ஆன்லைனில் செலுத்த கட்டுப்பாடு இல்லை. வழக்கம் போல டெபிட், கிரெடிட் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.