சென்னை, மே 12 - கொரோனா தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு உயிரிழந்த மாநக ராட்சி ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்று சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்கம் வலியு றுத்தி உள்ளது, இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு முதலமைச்சருக்க அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநக ராட்சியில் கொரோனா தடுப்பு பணி யில் துய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் களத்தில் நின்று நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டலம் 9, கோட்டம் 116ல் 13-7-2013 முதல் மலே ரியா (என்யுஎல்எம்) தொழிலாளி யாக ஜே.நந்தகுமார் (வயது 45) பணி யாற்றி வருகிறார்.
ஏப்.29அன்று வழக்கம் போல் பணிக்கு வந்து பணி யாற்றிக் கொண்டிருந்தபோது உடல் நலமின்மை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மே 3 அன்று கொரோனா பரிசோதனையின்படி வேப்பேரி அரசு கால்நடை மருத்து வமனையில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் மே-9 அன்று உயிரிழந்தார். ஜே.நந்த குமார் வருமானத்தில்தான் அவரது குடும்பம் ஜீவித்து வந்தது, இந்நி லையில் எவ்வித வருமானமுமின்றி அவரது குடும்பம் தவித்து வரு கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர் மற்றும் இதர நிரந்தர சுகாதாரப் பணியா ளர்கள் இறந்தால் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதேபோல் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இறந்த ஜெ.நந்தகுமார் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மாநகராட்சியில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். இது குறித்து ஏப்.24 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
பாதுகாப்பு உபகரணங்கள்
தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உடை, மாஸ்க், சானிடை சர்ஸ், கோட்டங்களில் கை கழுவ சோப்பு வசதி போன்றவைகள் செய்து தர வேண்டுமென்றும் ஏப்,24 தேதி யிட்ட கடிதத்தில் தெரிவித்தி ருந்தோம். ஆனால், பல கோட்டங்க ளில் அத்தகைய வசதிகள் செய்து தரப்படவில்லை. உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தொழிலாளர்கள் உயிரி ழப்பு ஏற்படாமலிருக்க தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
200 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டம்
உயிரிழந்த நந்தகுமார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி திங்களன்று (மே 11) செங்கொடி சங்கத்தின் பொதுச் செய லாளர் பி.சீனிவாசுலு தலைமையில் 9வது மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று (மே 12) சென்னையில் உள்ள 200 வார்டு அலுவலகங்களிலும் துப்பு ரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.