tamilnadu

2.5 கோடி சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டதுதான் பாஜக சாதனை

சென்னை, ஏப். 10- பாஜக ஆட்சியில் தொழில் செய்ய முடியாமல் 2.5 கோடி சிறு குறு நிறு வனங்கள் மூடப்பட்டு விட்டன என்று  ஆர்.கே. நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஆர்.கே. நகர் பகுதிக் குழு சார்பில் வ.உ.சி. நகரில் பொதுக்கூட்டம் சி.சேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அ.சவுந்தர ராசன் பேசுகையில், பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற  ஒற்றை நோக்கில் 40 கட்சிகள் கூட்டணி  அமைத்து களம் காண்கின்றன. மீண்டும்  பாஜக ஆட்சிக்கு வந்தால் தலைநகர் தில்லிக்கு பதில் நாக்பூருக்கு சென்று விடும். அதற்கு காரணம் அங்குதான் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந் தம், இந்துத்துவா கொள்கை, மத வெறிக் கொள்கை இந்தியாவை ஆட்சி  செய்யும் என்று பொருள். பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில், இருட்டில் பயணிப் பவனின் புலம்பல்போல மோடியும்,

அண்ணாமலையும் புலம்பிக் கொண்டி ருக்கின்றனர். நாடு முழுவதும் 7 கோடி  குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. அதில் 2.5 கோடி நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாமல் மூடப்பட்டு விட்டன.  அதற்கு காரணம் பாஜகவின் தவறான கொள்கைதானே. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பற்றி பாஜக அரசுக்கு கவலையில்லை. அவர்களின் கவலை யெல்லாம் பெரு முதலாளிகள் குறித்து தான் என்று குற்றம் சாட்டினார். இந்தியாவில் 57 விழுக்காடு (70 கோடி) இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் உழைப்பையும், சக்தியை யும், ஆற்றலையும் உரிய முறையில் பயன்படுத்தினால் உலகில் மிகப்பெரிய  பொருளாதார நாடாக இந்தியா மாறும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் எந்த திட்டமும் இல்லை. இதனால் வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கி றது.

இவற்றையெல்லாம் மூடி மறைக்க மதக் கலவரங்களை தூண்டி  விடுவது, பொய்யான பிரச்சாரங் களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்த நாட்டை புதை குழியை நோக்கி இழுத்து சென்று  கொண்டிருக்கிறார்கள். ஜனநாய கத்தை, அரசியல் சாசனத்தை, மாநில உரிமையை, சமூக நீதியை சிதைக்கத் துடிக்கிறார்கள். இந்தியா ஒற்றுமையான ஜனநாயக நாடாக திகழ, சமூக நீதியை வழங்கும் அரசியல்  சாசனத்தை பாதுகாக்க, சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ, தொழில்கள் தங்கு தடையின்றி நடைபெற, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது.

அப்படி யென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு இந்த பகுதி மக்கள், தொழிலாளர்கள் என  அனைத்து தரப்பினரும் கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், பகுதிச் செயலாளர் லட்சுமணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற் குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம், சர்க்கிள் தலைவர் சையது,  விசிக பகுதி பொறுப்பாளர் நாகராசு, திமுக கிளைச் செயலாளர் நாகராஜ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் பா.விமலா  ஆகியோர் பேசினர். முன்னதாக சிபிஎம்  பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் வரவேற்றார். கிளைச் செயலாளர் ஆர்.கீதா நன்றி கூறினார். கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் குமாரி நாகராஜ், சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.ஜெயச்சந்திரன், டி.ஜெயன், ஏ.விஜய், எம்.ஷாஜகான், ஜி.சித்ரா, எஸ்.மேரி உள்ளிட்ட கூட்ட ணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது

சென்னை, ஏப். 10- சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஆட்டம் திங்கட் கிழமை நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த கிரிக்கெட் ரசிகர்களிடம் சிலர் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக திருவல்லிக்கேணி காவல் துறை யினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  இதையடுத்து காவல் துறையினர்  சேப்பாக்கம் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, சேப்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்தனர்.  அப்போது கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றதாக மயிலா ப்பூரைச் சேர்ந்த கவுசி (30), திருவண் ணாமலையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (43), ஆந்திரத்தைச் சேர்ந்த உதயகிரண் (21), சென்னை அகரத்தைச் சேர்ந்த  அழகப்பன் (44), திருச்சியை சேர்ந்த ராஜபாண்டி (24),திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயவேல் (23), இம்மானுவேல் (21), கொடுங்கையூரைச் சேர்ந்த சச்சின் (19) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள சந்தை யில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.35,500  மதிப்புள்ள 13 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்ற னர்.