tamilnadu

சென்னை காவலர்களுக்கு  சுழற்சி முறையில் ஓய்வு

சென்னை, ஜூன் 1- சென்னை காவல்துறையினருக்கு சுழற்சி முறை யில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு அளிக்க  கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவ லர்கள் இந்த ஓய்வை எடுத்துக்கொள்ளலாம். ஒரு காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் பேருக்கு  ஓய்வு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. உதாரணத்துக்கு 100 பேர் பணியில் இருக்கும் இடத்தில் 10 பேருக்கு ஓய்வு அளிக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் அனைத்து காவலர்களும் பயன்பெறும் வகையில் ஓய்வை பிரித்து வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.  சென்னையில் கொரோனா பரவல் அதிக ரித்ததை அடுத்து ஏற்கனவே 55 வயதுக்கு மேற்பட்ட  காவலர்கள் பணிக்கு வரவேண்டாம் என்று கூறப்  பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.