tamilnadu

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றி!

சென்னை, ஏப். 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சனிக் கிழமையன்று (27.04.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குண சேகரன் தலைமையில் நடைபெற்றது. அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி தமிழகம் - புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்ற மகிழ்ச்சியான நிலைமை ஏற் பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதர வளித்த தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது இதயப் பூர்வமான நன்றியினை உரித்தாக்குகிறது.

‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையான கோடை வெயிலையும் பொருட் படுத்தாமல் இரவு, பகலாக தீவிர அரசியல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடு பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், அமைச்சர் பெருமக்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண் டர்கள் என அனைவருக்கும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு நன்றியினையும், பாராட்டு தல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் களப்பணி யாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், வர்க்க - வெகுஜன அமைப்புகளுக்கும் மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.             

அரசியல் காழ்ப்புணர்ச்சி
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ளத்தினால் தமிழக மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையொட்டி ரூ. 38 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வற்புறுத்தியது. ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு களுக்கு ரூ. 276 கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். இந்த ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக்கை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த தமிழகத்திற்கு ரூ. 276 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல ஒன்றிய அர சின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை யாகும். கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், மாநில உரிமைக்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தொடர்வதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, ஒன்றிய அரசு தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையை  கைவிட்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரி யுள்ள ரூ. 38 ஆயிரம் கோடியை உடனடி யாக தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டு மென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது.

ஏரி, குளங்களை தூர்வார  சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திடுக!
தமிழகத்தில் வழக்கத்தை விட வெயி லின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல ஏரி களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வரு கிறது. கடலூர், இராமநாதபுரம், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட முதலமைச்சர், அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வறட்சி பாதித்த 22  மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோ கம் செய்வதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.  அனைவருக்கும்  தங்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வீராணம் ஏரி உள்பட பல  ஏரிகள், குளங்கள் காய்ந்துள்ளன. இந்த  ஏரி, குளங்களை உடனடியாக தூர்வாரி னால் ஏராளமான பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, மழைக்காலங்களில் மழை நீரைச் சேமிக்க வழிவகுக்கும். எனவே, ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் பணிகளை துவக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.