tamilnadu

img

சாம்சங் தொழிற்சங்கத்தை பதிவு செய்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருக! தமிழ்நாடு முழுவதும் சிஐடியு மறியல்

 சென்னை, அக்.1 - சாம்சங் தொழிற்சங்கத்தை அங்கீகரித்து, அந்நிறுவனத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழு வதும் அக்டோபர் 1 செவ்வாயன்று சிஐடியு மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தியது.

சாம்சங் ஆலையில் பணியாற்றும் தொழி லாளர்கள் 85 விழுக்காட்டினர் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி உள்ளனர். இந்த சங்கத்தை பதிவு செய்ய ஜூன் மாதம் தொழிலாளர் நலத் துறையிடம் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த 45 நாட் களில் சங்கத்தை பதிவு செய்து தர வேண்டும். 100 நாட்களை கடந்த பிறகும் சங்கத்திற்கு பதிவு வழங்க மறுக்கின்றனர்.  பெரும்பான்மை சங்கத்துடன் சாம்சங் நிர்வாகமும் பேச மறுக்கிறது.

எனவே, செப்டம்பர் 9 முதல் சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும், கூட்டுபேர உரிமை யை நிலைநாட்ட வேண்டும் என வலி யுறுத்தி செவ்வாயன்று (அக்.1) தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காவல்துறை யினரின் கெடுபிடி, தள்ளுமுள்ளுக்கிடையே 45 மையங்களில் நடைபெற்ற இந்த போரா ட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் 1150 பேர் உட்பட பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அ.சவுந்தரராசன்

இதன் ஒருபகுதியாக சிஐடியு சென்னை  மாவட்டக் குழுக்கள் சார்பில், குறளகம் முன் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் மறியல் நடைபெற்றது. அப்போது அ.சவுந்தரராசன் பேசியதாவது:

தொழிற்சங்கத்தில் 3ல் ஒரு பங்கு நிர்வாகப் பொறுப்பில் வெளியாட்கள் இருக்கலாம் என்பது தொழிற்சங்க சட்டம். இந்தச் சட்டத்தை மதிக்க முடியாது என்று சாம்சங் கூறுவதை அரசு வேடிக்கை பார்க் கிறது. விண்ணப்பித்த 45 நாட்களில் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால், 100 நாட்களை கடந்த பிறகும்  சங்கத்தை பதிவு செய்யாமல் உள்ளனர். சாம்சங் என்ற பெயரை தொழிற்சங்கத்தினர் பயன்படுத்தக் கூடாது என்று அந்த நிறுவனம் ஆட்சேபித்து உள்ளதால் பதிவு செய்யவில்லையாம். இதுபோன்ற வாதம் எவ்வகையிலும் ஏற்க முடியாதது. சாம்சங் போலவே அனைத்து தொழிற் சாலைகளிலும் நிறுவனத்தின் பெயரை முன்வைத்துதான் தொழிற் சங்கம் இருக்கிறது. 90 விழுக்காடு தொழிற்சங்கங்கள் அப்படித்தான் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  ஸ்டாப் யூனியன் என்ற தொழிற்சங்கத் தை கர்நாடகாவில் பதிவு செய்ய  மறுத்தார்கள். இது தொடர்பான வழ க்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துகிறவர், நீங்கள் செய்கிற அதே தொழிலை செய்கிறாரா; உங்களுக்கு போட்டி யாக வருகிறாரா; அசோசியேஷன் போட்டி வங்கியா நடத்தப் போகிறது என்று கேட்டு நிர்வாகத்தின் வாதத்தை தள்ளுபடி செய்தது.

தொழிற்சங்கத்தோடு பேசித்தான் ஆக வேண்டும்!

சாம்சங் என்கிற பெயரில் தொழி லாளர்கள் தொழிற்சாலையா நடத்தப் போகிறார்கள்? இதே வாதத்தை முன்வைத்து உயர்நீதி மன்றத்தில் சிஐடியு வழக்கு தொடுத் துள்ளது. நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாத நிர்வாகம் வாய்தா  வாங்கி உள்ளது. ஆகவே, தொழிற்சங்க பதிவையும், தொழிற் சங்க உரிமையையும் பெறுவோம். நிறுவனத்தில் உள்ள 85 விழுக் காடு தொழிலாளர்கள் ஒரே தொழிற் சங்கத்தில் உள்ளனர். இந்த சங்கத் தோடு சாம்சங் நிர்வாகம் பேசித்தான் ஆகவேண்டும். ஒப்பந்தம் போட்டுத் தான் ஆகவேண்டும். தொழி லாளிக்கு முன்னாள் மண்டியிட்டுத் தான் ஆகவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

டிகே.ரங்கராஜன்

மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் போராட்டத்தை வாழ்த்தி பேசுகையில், “21ஆம்  நூற்றாண்டின் மிகமிக முக்கிய மானப் போராட்டமாக சாம்சங் போராட்டம் உள்ளது. இந்தியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துப் போராடுவது என்பது சாதாரணமானது அல்ல. நவீன தாராளமயத்தில், அரசுக்கும், மூல தனத்திற்கும் வித்தியாசமில்  லாத காலமாக மாறியுள்ளது. 

சாம்சங் என்ற பெயரில் மக்கள்  பொருட்களை வாங்கிக் கொள்ள லாம். ஆனால், தொழிலாளி அந்த பெயரில் தொழிற்சங்கம் வைக்கக் கூடாதா? 

“சாம்சங் போராட்டத்தை தமிழ கத்தில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் ஆதரிக்கின்றன. தமி ழக அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும்” என்று கூறினார். 

இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், துணைப் பொதுச் செய லாளர்கள் வி.குமார், கே.ஆறுமுக நயினார், துணைத் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செய லாளர்கள் எம்.சந்திரன், கே.சி. கோபிகுமார் மாவட்ட நிர்வாகி கள் எம்.தயாளன், சி.திருவேட்டை  (மத்திய சென்னை), கே.பால கிருஷ்ணன் (தென்சென்னை), எஸ்.கே. மகேந்திரன், ஆர்.ஜெயராமன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.