ஏரி, குளங்களில் மண் எடுக்க இணையதளத்தில் பதிவு
சென்னை, ஜூன் 29- நீர்வளத் துறைக் கட்டுப்பாட் டில் உள்ள 5,103 ஏரி கள், குளங்கள், கண்மாய்கள்; ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 6,757 ஏரிகள், குளங்கள், கண் மாய்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட அரசிதழ்களில் வெளியிடப்பட்டு, தற் போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விவசாயிகள் இடைத் தரகர்கள் இல்லாமல், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து, நேரடியாக எவ்விதக் கட்டணமுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மண் எடுக்கும் உத்த ரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாயப் பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, இணை யதளம் மூலம் வரும் ஜூலை 3 முதல் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் கன. துரை முருகன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மூடநம்பிக்கை, ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம்
கே.மாரிமுத்து வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 29- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவப் படுகொலை கள், மூடநம்பிக்கை களை அடியோடு ஒழிக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே.மாரிமுத்து வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் கே. மாரிமுத்து, மேலும் பேசுகையில் “சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக் கது” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 6,746 குடியிருப்புகள் ரூ.1146 கோடியில் மறுகட்டுமானம்
முதல்வர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 29- சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடி யிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது குறித்து பேரவை விதி 110-இன் கீழ் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறிய தாவது:
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த மூன்றாண்டு களில் மட்டும் 29 ஆயிரத்து 439 அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், 1 லட்சத்து 70 ஆயிரத்து 462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 172 திட்டப் பகுதிகளில் 79 ஆயிரத்து 94 அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், 89 ஆயிரத்து 429 தனி வீடுகளுக்கான கட்டுமானப் பணி களும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணி களுக்காக 6 ஆயிரத்து 685 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் இதர நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகாலப் பயன்பாடு மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக சிதிலமடைந் துள்ளன. இந்தக் குடியிருப்புகளை முறை யாகக் கணக்கெடுத்து, அவற்றை மறு கட்டுமானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து 643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்ட றியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்.
இதன் முதற்கட்டமாக, 2024-2025-ஆம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி. பதி நகர் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடி யிருப்புகள், ஆயிரத்து 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.