tamilnadu

img

உடுமலை: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் - துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை 

உடுமலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
உடுமலை அருகே தேவனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் மகள் 27 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இவர் வீட்டில் தனியாக இருந்த போது நேற்று உள்ளூரை சேர்ந்த மோகன் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடுமலையில் உள்ள மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை    முற்றுகையிட்டு ,  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மோகன் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.