சென்னை, டிச. 23 - குடும்ப பிரச்சனையில், தனது தாயின் இரண்டு கைகளையும் மகனே வெட்டி துண்டாக்கிய கொடுமை சென்னையில் அரங்கேறியது.
இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை மருத்துவர்கள் 23 பேர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளுக்கும் சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக கைகளை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான இந்த அறுவைச் சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக ராஜீவ் காந்தி மருத்துவ மனை மருத்துவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தமது சமூகவலைத் தளப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். “சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அவரது இரண்டு கைகளையும் வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ள மருத்துவர்களை பாராட்டி வாழ்த்து கிறோம். 8 மணி நேரம் ஒருமித்து உழைத்த 23 மருத்துவர்களின் குழுவுக்கும் அவர்களோடு இணைந்து பணி யாற்றிய செவிலியர்கள், பணியாளர் கள் மற்றும் மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட அனைவரை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.