tamilnadu

img

அரசாணை 2டி 62ன் கீழ் ஊதிய உயர்வு வழங்குக

அரசாணை 2டி 62ன் கீழ் ஊதிய உயர்வு வழங்குக

உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க‘மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருவள்ளூர், ஏப் 20- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், அரசாணை 2டி 62 அடிப்படையில் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு கும்மிடிப் பூண்டியில் ஞாயிறன்று (ஏப் 20), தோழர்கள் ஏ.பழனி, டி.பாலசுப்பிரமணியம் நினைவரங்கத்தில் நடை பெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கே.அர்ஜுனன் வரவேற்றார்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவர் ஜி.மாரி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் என்.தீபா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் துவக்க வுரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் வேலை அறிக்கையையும், வரவு செலவு கணக்கையும் முன்மொழிந்தார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார்,  சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி ஆகி யோர் வாழ்த்திப் பேசி னர். சிஐடியு மாநில துணைத்தலைவர்  கே.விஜ யன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். ஒன்றிய தலைவர் ஆர்.குமாரி நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள். மாநாட்டில் மாவட்டத் தலைவராக பி.கதிர்வேல், மாவட்டச் செய லாளராக ஏ.ஜி.சந்தானம், பொருளாளராக சி.வெங்க டேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் அரசாணை 2d 62 அடிப்படையில் வேலை யின் தன்மையை மதிப்பீடு செய்து டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு மாதம் ரூ.14.503, தூய்மை பணி புரிவோர் மற்றும் தூய்மை காவலருக்கு ரூ.12 ஆயிரத்து 53,  டிபிசி  பணியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரத்து 59,  2004 ஜனவரி முதல் வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் வேலைக்கு புதிய நிய மனம் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை ரூ.15000 உடனடியாக வழங்க வேண்டும், பொங்கல் போனஸாக ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சீருடை பேரணி முன்னதாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து, தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் டெங்கு கொசு ஒழிப்ப வர்கள் என ஏராளமான ஊழி யர்கள் பங்கேற்ற சீருடை பேரணி நடைபெற்றது.