சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: வேலூர், திருப்பத்தூர் குடியாத்தத்தில் ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அமைப்பாளர் தியாகமூர்த்தி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.வீரபத்திரன், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் செல்வம், ஏகாம்பரம், ஆனந்தன், கோவிந்தராஜ், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் . அதேபோல் சிபிஎம் வேலூர் வடக்கு அல மேலுமங்காபுரம் மற்றும் ராமமூர்த்தி கிளைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் என். கன்னியப்பன், ஜே.பிச்சாண்டி, மூத்த உறுப்பினர் பன்னீர் செல்வம் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், எஸ்.பரசு ராமன், எம்.வளர்மதி ஆகி யோர் கலந்து கொண்டனர். சிபிஎம் குடியாத்தம் நகரம் பிச்சனூர் மற்றும் புவனேஸ்வரி பேட்டை கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நகர செயலாளர் வி.குபேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் செம்மலர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன், நகர குழு உறுப்பினர்கள் முரு கானந்தம், லெனின், ஆறுமுகம், அஞ்சலி, தன சேகரன், ஜமுனா ஆகி யோர் பங்கேற்றனர்.
அம்பேத்கர் வேன் நிறுத்தம் 15ஆவது ஆண்டு விழா
சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் வேன் நிறுத்தம் 15ஆவது ஆண்டு விழா தலைவர் டி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே.மூர்த்தி, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, அம்பத்தூர் பகுதி தலைவர் சு.பால்சாமி, செயலாளர் ஏ.ராயப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஜி.பார்த்தசாரதி, சங்க செயலாளர் இ.சிவசங்கரன், பொருளாளர் கே.ஆனந்தன், காப்பாளர்கள் பி.அன்பரசன், கே.சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.