மேற்குவங்க கல்வி அமைச்சர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க கல்வி அமைச்சர் பதவி விலக கோரி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கனிஷ்கர், பீமாராவ் ராம்ஜி உள்ளிட்ட கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் தகஜிம்பானு தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.