விவசாய நீருக்கு வரி விதிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
விவசாயத்திற்குப் பயன்படுத்தும் தண்ணீருக்கும் வரி விதிக்கப்படும் என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் அறிவித்ததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்டப் பொருளாளர் பி.சிவராமன், நிர்வாகிகள் பி.சௌந்தரராஜன், பழனி, ஆர்.செல்வராஜ், ஏ.நாகராஜன், ராஜாராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.