சென்னை,டிச.5- திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதி யில் 40.95 ஏக்கர் பாது காக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப் பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவா யிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முன்னாள் எம் எல் ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும், நிலத்தை அளவீடு செய்து அது வனப்பகுதி நிலம் என அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு உரிய கார ணங்கள் விளக்கப்பட வில்லை. மனுதாரரின் வயது, வருமானம் குறித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நிலம் வகை மாற்றம் குறித்த உண்மை களை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள் ளது. எனவே, இந்த வழக்கு 20 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.மனுதாரர் ஓராண்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி பொது நல வழக்கும் தாக்கல் செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.