tamilnadu

இயற்கை நார்களின் கலவையில் தயாராகும் மரப்பலகைகள்

சென்னை, ஆக. 23- இயற்கை நார்களின் கலவையில் தயாரிக்கப்படும் ‘இண்டோவுட்’  என்ற செயற்கை மரப் பலகை ரகங்கள் சென்னையில் அறி முகம் செய்யப்பட்டன. பார்ப்பதற்கும், தொட்டு  உணர்வதற்கும், செயல்திற னிலும் மரங்களைப் போலவோ, பிளைவுட்க ளைப் போலவோ இருந்தா லும் இண்டோவுட் மரத்தா லானதல்ல. இதைத் தயா ரிக்க இயற்கையான பிற வகை நார்கள், விவசாயக் கழிவுகள், நச்சு இல்லாத ரசா யனம், கலப்பில்லாத பாலி மர் போன்றவை பயன்ப டுத்தப்படுகின்றன.  மேலும் இந்த பலகை 100 விழுக்காடு மறுசூழற்சிக்கு ஏற்றது.  சென்னையில் தச்சு வேலைப் பொருட்களை விற்பனை செய்யும்  மிலம் சேல்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனமும்  இண்டோவுட் பாலிமர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த செயற்கை  மரப்பலகையை தயா ரித்துள்ளன. “சாமானிய மக்களிடமும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல், இணக்கமாகச் செயல்படும் மாற்று கட்டுமானப் பொருட்களுக்கான தேவை  உள்ளது என்று  இண்டோ வுட் பாலிமர்ஸ் நிறுவ னத்தின் தலைவர் பி.எல். பெங்கனி  கூறினார்.