tamilnadu

img

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் அரசியல் அமைப்பு தினம்

வேலூர், நவ. 29- அரசியல் அமைப்பு தினம்  மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கோ. சரளா தலைமை தாங்கினார்.  உதவித் தலைமை ஆசிரியர் டி.என்.ஷோபா முன்னிலை வகித்தார். ஜுனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வர வேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.ஆனந் தன், பாரத சாரண சாரணி யர் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஜெ.செலின், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கு.பாரதி ஆகி யோர் பேசினர். ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் இந்திய அர சியல் சாசன அமைப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.