tamilnadu

ஊழியர் நியமனத்தில் பெரியார் பல்கலை. துணை வேந்தர், டீன் முறைகேடு ஊழியர்கள் புகார் கடிதம்

சென்னை,செப்.12-  சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர், டீன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி ஊழியர் கள் உயர்கல்வித்துறை செயலா ளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக்கல்லூரி நிர்வா கப்பணியாளர் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதா கவும் அதற்கு துணைவேந்தர் குழந்தைவேல், டீன் கிருஷ்ண குமார் துணை போவதாகவும், ஒரு தரப்புக்கு சார்பாக அவர்கள் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டி உயர்கல்வித்துறை செயலாள ருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  அந்த கடிதத்தில், துணை வேந்தர் குழந்தைவேல் பதவியேற்ற காலம் முதல் ஒருதலைபட்சமாக செயலபடுகிறார்.  விதிகளுக்கு புறம்பாக 22 பேருக்கு நிரந்தர பணி வழங்க முயல்கிறார். அதற்கு காரணம் அந்த 22 பேரில் அவரின்  உறவினர் ஒருவரும் இடம்பெற்றுள் ளதுதான். பத்து ஆண்டுகள் பணி முடிந்த 274 பேர் சீனியாரிட்டி முன்னிலையில் இருந்தும் அவர்களை விட்டுவிட்டு குறிப்பிட்ட 22 பேரை பணி நிரந்தரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.   இதனால் பணி நிரந்தரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நபர்களால் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த  வேண்டும் என்று தெரிவித்துள்ள னர்.