பேரூராட்சிக்கும், ஊராட்சிக்கும் இடையே சிக்கி அல்லல்படும் மக்கள் - ஜி.லெனின்
தருமபுரி, ஏப்.19- பென்னாகரம் பேரூராட்சிக்கும், கூத்தப்பாடி ஊராட்சிக்கும் இடையே உள்ள கிராம மக்கள், அடிப்படை வசதி கள் கேட்டு கடந்த 3 தலை முறை களாக ஏங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தா றான் கொட்டாய், கூத்தப்பாடி ஊராட் சிக்குட்பட்ட கொய்யா மரத்துக்கிணறு ஆகிய கிராமங்களில் 75க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் சாலை, குடிநீர், மின் சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லாமல் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற னர். சாலை வசதியில்லாததால் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்வ தால் தினந்தோறும் பள்ளிக்குச் செல் லும் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் தாமத மாக செல்லும் சூழ்நிலைகு உள்ளது. மேலும், வறட்சியின் பிடியிலுள்ள இப்பகுதியினர் குடிநீருக்காக அல் லாடி வருகின்றனர். வெகு தொலைவு தூரம் நடந்து சென்று அப்பகுதியி லுள்ள விவசாய கிணற்றில் இருக்கும் தண்ணீரை வாளி மூலம் இரைத்து, குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்ற னர். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி னால், கூத்தப்பாடி ஊராட்சியிலிருந்து உங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும், கூத்தப் பாடி ஊராட்சியிலுள்ள அதிகாரிக ளிடம் கேட்டால், இது பென்னாகரம் பேரூராட்சிக்கு சேர்ந்தது, அவர்களி டம் கேளுங்கள் என்று அலைகழிக் கின்றனர். பேரூராட்சிக்கும், பஞ்சாயத் துக்கும் இடையே இந்த கிராமம் இருப்பதால், யாரும் கண்டுகொள்ளா மல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தங்களது வேதனையை கொட்டுகின் றனர். மேலும், யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால், கட்டிலில் வைத்து 4 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற பின்னரே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடல் நிலை சரியில்லாதவர்களை தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது ஒரு சிலர் மரணித்த நிலையும் ஏற்பட்டுள் ளது. இரவு நேரங்களில் தங்களின் வீட்டின் அருகே யானைகள் இருந்தால் கூட எங்களுக்கு தெரிவதில்லை. தெரு விளக்கு இல்லாததால் யானைகள் எங்கு நிற்கிறதோ? என்ற அச்சத்தி லேயே செல்ல வேண்டிய நிலை உள் ளது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் உங்கள் பகுதியில் சாலை வசதி சரியில்லை; மேலும் மின் சாரமும் இல்லாததால் யானையை விரட்ட எங்களால் வர முடியாது என்று தெரிவிக்கின்றனர். எனவே, 3 தலை முறைகளாக அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் எங்களுக்கு எப்பொ ழுது விடிவு காலம் பிறக்கும் என்று, அப்பகுதி மக்கள் காத்துக் கொண்டி ருக்கின்றனர்.