tamilnadu

img

ரவுடிகளை ஒடுக்கும் ஆபரேஷன் தொடங்கியது

சென்னை,ஜூலை 8- சென்னை பெரம்பூரில் நடந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த  தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில்  எந்தவித ஆலோசனைக்கும் இடமின்றி சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரை மாற்றம் செய்திருக்கிறார் முதல்வர்.

சென்னை ஆணையர் சந்திப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த சில  மணி நேரங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் அருண், சென்னை மாநகரம் எனக்கு புதிதல்ல. இங்கு  எல்லா பிரிவுகளிலும் பணி புரிந்துள் ளேன்.

சென்னையில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. சென்னை நகரில் இருக்கக்கூடிய சில பிரச்சினை கள். குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குற்றத் தடுப்பு நடவடிக்கை கள், போக்குவரத்தில் இருக்கக் கூடிய சிக்கல்கள், ரவுடிகளை கட்டுப் படுத்துவது, போலீசில் நடைபெறும் சில தவறான நடவடிக்கைகள் ஒடுக்குவது, கட்டப் பஞ்சாயத்து ஆகிய வற்றை கட்டுக்குள் கொண்டு வருவேன்.

ரவுடிகள் அட்டகாசம் கட்டுப்படுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் உளவுத் துறை எச்சரித்ததா? அதை சரியாகக் கையாளவில்லையா? என்பது பற்றி இப்போது சொல்ல இயலாது.

தற்போது  சரியாக செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு தினமும் ஒரு செயல் திட்டம் கொடுப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை. செய்யும் பணியை சரியாக செய்தாலே போதும் என்று ஆணையர் அருண்  கூறினார்.