tamilnadu

img

நவ.26, 27 பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்.... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு

சென்னை:
மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26, 27 தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை மாபெரும் வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

103 ஆவது நவம்பர் புரட்சி தினமான சனிக்கிழமையன்று (நவ.7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார். அதன்பின்னர் செய்தியாளர்களி
டம் அவர் கூறியதாவது:

சோசலிசமே தீர்வு
சுரண்டல் சமூகத்தை மாற்றி, மனிதனை மனிதன் அடக்கி ஆளும்கோட்பாட்டை மாற்றி, உழைப்பாளிகளை ஆட்சியில் அமர்த்திய உன்னதமான நாள் நவம்பர் புரட்சிதினம். அந்த புரட்சி தினத்தின் 103 ஆம் ஆண்டை உலகம் முழுவதும் உள்ளகம்யூனிஸ்ட்டுகள், முற்போக்காளர்கள் கொண்டாடுகின்றனர். முதலாளித்துவ முறை மாற்றப்பட்டு பொதுவுடமை அமைப்பு ஏற்படும்போதுதான் மக்கள் அன்றாடம் சந் திக்கும் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். சோசலிச நாடுகள் கொரோனா தொற்றை எதிர்கொண்டு மக்களை பாதுகாத்தன. அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகள் கூட மக்களை பாதுகாக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கானோரை பலி கொடுத்துள்ளன. எனவே, முதலாளித்துவம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காது. சோசலிசம்தான் தீர்வு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்தகைய சோசலிச அமைப்பு முறையை இந்தியாவில் கொண்டு வருதற்கான மகத்தான பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. 

பொது வேலைநிறுத்தம்
மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கை, மதவெறிபிடித்த இந்துத்துவ கொள்கைகளை எதிர்த்துமக்களை திரட்டும் பணியில் கட்சிஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களை சீர்குலைப்பு, பொதுத்துறை தனியார்மயம் போன்ற தவறான பொருளாதார கொள்கை போன்றவற்றை எதிர்த்து நவ.26-27 தேதிகளில் பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள், விவசாயசங்கங்கள் அறைகூவல் விடுத்துள் ளன. அந்த போராட்டத்தை தமிழகத்தில் வலுவாக நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசித்துள்ளோம். இந்தபோராட்டத்திற்கு அனைத்து பகுதியினரும் பேராதரவு தர வேண்டும்.பட்டாசுகளுக்கு சில மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதனால் விருதுநகரில் உள்ள 5 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக முதலமைச் சர் தடை விதித்துள்ள மாநில முதலமைச்சர்களை தொடர்பு கொண்டுதடையை தளர்த்த வற்புறுத்திட வேண்டும். இந்த தடை நீடித்தால்தொழிலாளர்கள், சிறு உடமையாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே, முதலமைச்சர் இந்தபாதிப்பிலிருந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இறை நோக்கம் அல்ல; மதப்பதற்றம் ஏற்படுத்தவே!
இதன்பின்னர் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு பதிலளித்தகே.பாலகிருஷ்ணன், “பாஜகவின் வேல்யாத்திரை இறை நம்பிக்கைக் காக நடத்தப்படவில்லை. முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக, பாஜக-வின் அஜெண்டாவை நிறைவேற்ற, தமிழகத்தை மதப்பதற்றம் மிக்க மாநிலமாக மாற்றுவதற்காக நடத்தப்படுகிறது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முதன்முதலில் மார்க்சிஸ்ட் கட்சிதான் வலியுறுத்தியது. கடைசியாக நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது முதலமைச்சர் தடை விதித்துள்ளதாக அறிவித்தார். அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். இருப்பினும் அதை வரவேற்றோம்.

3 ஆம் பக்கத் தொடர்ச்சி...